
பாதியில் கலைக்கப்பட்ட கனவுகளைச் சேமித்து வைக்கிறீர்கள்
உறக்கத்தில் புன்னகைகளை மீதம் வைக்கிறீர்கள்
யாரும் கேட்டிராத நள்ளிரவின் ஓசையில் திடுக்கிடுகிறீர்கள்
தனிமையின் நிசப்தத்தில் நீங்கள் அதிர்வுறுகிறீர்கள்.
மரணம்
ரசித்துக் கொண்டிருக்கிறது.
நிதானமாக.
=============
இந்தக் கவிதையோடு இணைக்கப்பட்ட இந்தப் படம் யதேச்சையாக கிடைத்தது. துக்கத்தோடு கலந்த நகைச்சுவை. நகைச்சுவையில் எப்பவும் மெல்லிய துக்கம் இழையோடும் என்று எப்பவோ படித்த ஞாபகம்.
4 எதிர் சப்தங்கள்:
நல்ல ரசனை- மரந்த்திலும்!
கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி.
மரணத்தின் வாசனை!
http://starmakerstudio.blogspot.com/2009/08/blog-post_708.html
நன்றி.
Post a Comment