சேலம் மாவட்டம் சங்ககிரியில் கட்டப்பட்டிருக்கும் அண்ணா நூற்றாண்டுவிழா பேருந்து நிலையத்தை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.
ஈரோடு-சேலம் சாலையின் நடுநாயகமாக இருக்கும் முக்கியமான ஊர் சங்ககிரி. (சங்கு வடிவ கிரி?). ஊருக்கு இரண்டு பக்கமுகாக இரண்டடிக்கு ஒன்றாக, தோராயமாக பத்துக் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களும் டியூப்லைட்கள் கட்டி, சங்ககிரியிலிருந்து சேலம் வரைக்குமான முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர்களும் கொடி தோரணங்களும், பேனர்களுமாக தங்கள் பராக்கிரமத்தை காட்டியிருக்கிறார்கள் சேலத்துக் கண்மணி்கள்.நேற்று பெங்களூருக்கு பேருந்தில் வரும் போது எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் வந்தன.
1. இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்?2. இருபக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள், இலட்சக்கணக்கான பேனர்கள், கோடிக்கணக்கான கொடி தோரணங்களை ஸ்டாலின் விரும்புகிறாரா? இல்லை கழகத்தினர் அவர் பேச்சையும் கேட்காமல் செய்கிறார்களா?
3. வீரபாண்டியார், ஸ்டாலினுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்துபவர் என்று சில நாட்கள் முன்பு வரைக்கும் செய்திகளில் படித்திருக்கிறேன். வீரபாண்டியாரின் கோட்டை என்று பேசப்படும் சேலத்தில் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு தருகிறார். மாறிவிட்டாரா?
==========நேற்று எங்கள் ஊரில் சில ரத்தத்தின் ரத்தங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்புவதாக நான் உணர்ந்தது.
1. இத்தனை இலவச திட்டங்களும் நிச்சயமாக இன்னும் ஒரு தேர்தலுக்கு திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.2. டாஸ்மாக் வருமானமே இத்தனை கோடிகளை இலவச திட்டங்களில்செலவழிக்கும் தைரியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன. (சரியா?)
என் சித்தப்பாவுக்கு ஒரு சந்தேகம், அந்த சந்தேகம் முந்தைய கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.பால் விலை, பஸ் டிக்கெட் விலை உயர்வுக்கு எல்லாம் போராட்டங்கள் நடக்கின்றன. தீபாவளி சமயத்தில் 110 ரூபாய் சரக்கு 140 ரூபாய்க்கு விற்ற போதும் எந்த குடிமகனும் பிரச்சினை செய்ததாக தெரியவில்லை. ஏன்?
=====2. வேலை செய்யவில்லை என்றால் கேட்கப்படும் கேள்விகள் குறைவு.
4 எதிர் சப்தங்கள்:
டாஸ்மாக்..திமுகவிற்கு பாஸ்மார்க்..இலவசங்களை அள்ளி விட உதவும் அட்சயபாத்திரம்.இனி வரம் தேர்தல்களில் திமுகவை தோற்கடிப்பது கடினமே
முதல் இரண்டு கேள்விகளுமே 'நச்'.........
ஆனா இது அரசியலுக்கே உரிய ஒரு பரம்பரை வியாதி மாதிரி தெரியுது!!!!
//இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்//
எனக்கும் இதே கேள்வி தான் தோன்றியது
மணிகண்டன் பேசாம நீங்க அரசியலுக்கு வந்துடுங்களேன். இல்லை அரசு உங்க பேச்சை கேட்கற நிலைக்கு வந்துடுங்களேன்.
Post a Comment