Jan 17, 2013

ஜீப்பில் ஏறிக்கொள்ள நான்கு காரணங்கள்


அலுவலகம் முடிந்து வந்த பிறகு வழக்கம் போலத்தான் மின்னஞ்சலைத் திறந்தேன். ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் மகிழ்ச்சியாகவும். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள காரணம் கிடைப்பது சந்தோஷமாகத்தானே இருக்கும்...

நன்றி

 **************************************************************************
ஹாய்,

உண்மையாலுமே உங்களோட வலைப்பதிவில் அப்டேட் இல்லையென்றால் இன்று உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்றுதான் இருந்தேன். மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

இரண்டு விஷயங்களை (பலம்) நான் கவனிக்கிறேன்

1)தினசரி எழுதுவது சுருக்கமாகவும் (இது பெரும்பாலான                     வலைப்பதிவுகளில் இருப்பதில்லை) சுவாரசியமாகவும் இருக்கிறது

2) சுயபெருமை உங்கள் வலைப்பதிவில் மிகக் குறைவாக இருக்கிறது.

நன்றி!

தனுஷ்

***************************************************************************
Hi Manikandan,

How are you?  I am good here.  

I am regular reader of your blog everyday.  Today you wrote in your blog that you purposely stopped writing for eight days to test yourself that how much and how many people reading your blog if you write everyday.

Atleast last one year i am regularly read your blog.  Also you worried that nobody responding if you are not writing.  It is not like that so many people reads everyday like reading newspaper.  People may be dont have time to reply or write mails or comments.  But trust me like so many people love to read your blogs.  So dont stop writing keep writing and make happy people like me who expect everyday.

Take care and enjoy your like

Have a nice day Manikandan.

Sivaprakasam Gopalakrishnan

******************************************************************************

Dear Anna,

Dont hesitate to write in ur blog. Actually I am working in Hyderabad.I read ur blog daily without fail. When ever I feel moodout, I read ur old blog posts.so please continue to write in ur blog. ‘எப்படியோ நாசமா போ’ என சபித்திருப்பார்.

நான் எதுவுமே நினைக்கவில்லை. நான் நீங்கள் எழுதாதற்கு காரணம் நீங்கள் பாரியூர் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

அன்புடன்,
தியாகு

****************************************************************************

மணிகண்டன்,

உங்களுக்கு கூட மனசு சரியில்லையா, ஆச்சரியமாக தான் இருக்கிறது.  நான் நீங்கள் ஊரில் இல்லை என்று நினைத்திருந்தேன்.  நிசப்தம் நிசப்தமாகவே இருந்தது ஏமாற்றமாக தான் இருந்தது.

//"கொஞ்ச நாளைக்கு ஃபேஸ்புக், ப்லாக் எதுவும் வேண்டாம் என்று இருந்தேன்"//.  இதை படித்த பின் தான் இது நீங்களாகவே ஏற்படுத்திகொண்ட break என்று தெரிந்தது.

இந்த break கூட அவ்வப்போது தேவை தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும்.  இதை வழமையாகவே செய்யலாம் மாதத்திற்க்கு சில நாட்கள் முழுமையாக குடும்பத்திற்க்கு என்று...

ஆனால் போகும் போது leave சொல்லிட்டு போகனும்....

//”எழுதினால் மட்டுமே கவனிக்கப்படுவேன் என்று உணர்ந்து கொண்ட பிறகு இன்னமும் வேகமாக எழுத வேண்டும் என்று விருப்பம் தலையெடுக்கிறது.”//

எப்படியோ எழுதினால் நல்லது தான்.

சாரு அவர்களின் கூடங்குளம் பேச்சு வெளியான அன்றே உங்கள் fb status, blog பார்த்தேன், ஏதேனும் updates இருக்கிறதா என்று, நீங்கள் அமைதியாக இருக்க வாய்ப்பேயில்லையே என்று யோசித்தேன்.  Anyway, good come back,  சாருவோடு மீண்டும் ஆரம்பித்து இருக்கிறீர்கள், இப்படி தான் இருக்கனும், தொடரட்டும் உங்கள் சீரிய பணி.  Continue with the same spirit as before.

உங்கள் புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை.  உங்களிடம் stock இல்லை என்று நினைக்கிறேன், online ல் எப்படி வாங்குவது என்று சொல்லவும், கதிர்பாரதியின் புத்தகமும், இரண்டும் எப்படி வாங்குவது என்று தெரியப்படுத்தவும்.

கல்பனா

3 எதிர் சப்தங்கள்:

துளசி கோபால் said...

தினமுமா எழுதறீங்க? !!!!

இனிய பாராட்டுகள்.


8 வருசங்களுக்கு முன் ஆரம்ப ஜோர் அப்படி இருந்து ...இப்போது வாரம் 3. அதுக்கே நேரம் கிடைப்பதில்லை:(

சாந்தி மாரியப்பன் said...

அதென்ன திடீர்ன்னு லீவு விட்டுட்டீங்க. சத்தமில்லாம எத்தனையோ பேர் வாசிச்சுட்டு வரோம். தெரியுமா? :-)))

மருதநாயகம் said...

புறாவின் காலில் ஓலை கட்டி அனுப்பினேனே இன்னும் வந்து சேரவில்லையா?