1) வெயிலின் கிளைகளை ஓவியமாக்குபவள்
ஆண்களால் நிரம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.
இரவின் பக்கங்களில் எழுதிய கதைகளில்
மழைத்துளியின் கன்னங்களில் வரைந்த ஓவியங்களில்
காற்றின் இடைவெளிகளில் நிரப்பிய கவிதைகளில் -
நினைவுப் பந்தலிட்டு
வசிக்கத் துவங்கிய
அவளுக்கும்
எனக்குமிடையில்
நீ
வருகையில்
சொல்லத்துவங்கினாள்
தான்
வெயிலின் கிளைகளை
ஓவியமாக்குபவள் என்று.
நன்றி: நெய்தல்
------
2) கவிதையைக் கைவிடுதல்
மரணத்தின் கவிஞன்
இரவின் பேரமைதியில்
கவிதை எழுதத் துவங்கினான்.
வேசி
மதுக்குப்பி
சிகரெட் துண்டு
கண்ணாடி மீன்கள்
சொற்களாகின.
முடிவுறாத வரிகளின்
விரல் பிடித்து நடந்தவன்
பெரும் வனத்தின்
இருளில்
கவிதையைக் கைவிடுகிறான்.
அவன்-
திக்கற்ற பரப்பில்
கவிதையின்
துக்கத்தை நினைக்கையில்
பதட்டம் கவிகிறது.
நட்சத்திரவொளியில்
நடுங்கும்
மயானமொன்றின் பதட்டம்.
நன்றி: வார்த்தை, மே'2008
---
ஆண்களால் நிரம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.
இரவின் பக்கங்களில் எழுதிய கதைகளில்
மழைத்துளியின் கன்னங்களில் வரைந்த ஓவியங்களில்
காற்றின் இடைவெளிகளில் நிரப்பிய கவிதைகளில் -
நினைவுப் பந்தலிட்டு
வசிக்கத் துவங்கிய
அவளுக்கும்
எனக்குமிடையில்
நீ
வருகையில்
சொல்லத்துவங்கினாள்
தான்
வெயிலின் கிளைகளை
ஓவியமாக்குபவள் என்று.
நன்றி: நெய்தல்
------
2) கவிதையைக் கைவிடுதல்
மரணத்தின் கவிஞன்
இரவின் பேரமைதியில்
கவிதை எழுதத் துவங்கினான்.
வேசி
மதுக்குப்பி
சிகரெட் துண்டு
கண்ணாடி மீன்கள்
சொற்களாகின.
முடிவுறாத வரிகளின்
விரல் பிடித்து நடந்தவன்
பெரும் வனத்தின்
இருளில்
கவிதையைக் கைவிடுகிறான்.
அவன்-
திக்கற்ற பரப்பில்
கவிதையின்
துக்கத்தை நினைக்கையில்
பதட்டம் கவிகிறது.
நட்சத்திரவொளியில்
நடுங்கும்
மயானமொன்றின் பதட்டம்.
நன்றி: வார்த்தை, மே'2008
---
ஓவியம்: ராஜன் புதியேடம்
1 எதிர் சப்தங்கள்:
இரண்டு கவிதைகளுமே வசிகரமாக இருந்தாலும் பயிற்சியின்மையால் வாசிப்பனுபவம் கிட்டவில்லை இதுவரை. ஆயினும் இரு நல்ல கவிதைகள் சட்டைப்பையில் உள்ள திருப்தி உள்ளது தற்போது.
Post a Comment