Apr 16, 2008

திபெத்தியர்களும், இந்திய 'சூடோ' கம்யூனிஸ்ட்களும்.

காங்கிரஸ் அரசிற்கு இந்த அளவு தைரியம் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திபெத் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினால் நாங்கள் தடுக்க முடியாது என்று சீன அரசுக்குத் தெளிவாக்கியிருக்கிறது. ஒரு சலாம். இதில் கூட அமெரிக்க அரசு சீனாவை எதிர்த்துப் பேசும் தைரியத்தை கொடுத்திருக்கலாம். அது பற்றிய பிரச்சினை இங்கு இல்லை.

மேற்கு வங்கத்தில் திபெத்திய ஆதரவு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து வழக்கம்போலவே தங்களின் ______தனத்தை காட்டியிருக்கும் மேற்கு வங்க அரசின் சீன சொம்படித்தனத்தைப் பற்றித்தான் எரிச்சல் வருகிறது. இந்தியா போன்ற சுரணையற்ற தேசத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் மட்டும் சுரணையுடையவர்களாக இருப்பார்கள் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமானது என்பது பற்றி அறிந்தேயிருக்கிறேன் என்றாலும் தங்களின் போலித்தனத்தை 'சூடோ'கம்யூனிஸ்ட்கள் என்றும் ஒத்துக் கொண்டதில்லை என்பது மட்டுமில்லை, விவஸ்தையற்ற முடிவுகள் எடுக்கவும் தயங்கியதில்லை என்பது வரலாறு.

ஐம்பதுகளின் முடிவில் சீன,இந்திய அரசின் உறவில் விரிசல் விழுந்து போருக்கான வெளிச்சம் படரத்துவங்கையில் இங்கு இருந்து கொண்டு தாங்கள் சீனாவிற்கு ஆதரவு என்று கொள்கை முழக்கம் செய்த பச்சோந்திகள் அல்லவா? இதற்காக நான் ஒன்றும் அகண்ட பாரதம் என்ற கொடி தூக்க வரவில்லை. அந்தக் குழாம் பற்றி இன்னொரு நாள் பேசலாம். அட கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? அடுத்த வீட்டுக்காரன் தன் பொண்டாட்டியை அடிக்க வரும் போது "அந்த தேவிடியா கூட எனக்கு நேத்து சண்டை! அடி அவளை ங்கொக்கமக்கா!" என்று பேசும் புருஷனைப் போன்ற மகராசன்கள் எங்கள் தேசத்து கம்யூனிஸ்ட்கள்.

எனக்கு கம்யூனிஸம் மீது எந்த வெறுப்புமில்லை. இன்னும் சொல்லப் போனால் தன் சூழல், சமூகம், தம்மைச் சுற்றி வாழும் மக்களின் நிலை பற்றி சிந்திக்கும் எவருக்கும் கம்யூனிஸம் என்ற பெருங்கடலின் சிறு துளியில் கால் நனைத்திருப்பான். என் வெறுப்பு 'சூடோ'கம்யூனிஸ்ட்கள் மீதுதான்.

சீனாவில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறது என்பதற்காகவே அந்த நாட்டின் நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் என்றால் கம்யூனிஸம் எந்த அளவு அங்கு நடைமுறையில் இருக்கிறது என்பது இங்கே இருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கிறதா? அந்த இரும்புக் கதவிற்குள்ளான அடக்குமுறைகள் பற்றிய கவனிப்பு இவர்களுக்கு உண்டா? உண்மையைச் சொன்னால் ஒரு இழவும் கிடையாது. சிவப்பு ஜட்டி அணிந்தவன் கூட இவர்களுக்கு 'காம்ரேட்'. அவ்வளவுதான்.

இவர்கள் எதிர்த்துப் பேசும் தாராளமயமாக்கலுக்கு சீனாக்காரன் சிவப்புக் கம்பளம் விரித்து 10% பொருளாதார வளர்ச்சியில் நடை போடுகிறான். ஆனால் இதுவெல்லாம் இவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது.

எத்தனை கம்யூனிஸ்ட்கள் இன்று களத்தில் இறங்கி போராடுகிறார்கள். சராசரி மூன்றாம்தர அரசியல்வாதிகள்தான் இன்றைய பெரும்பாலான 'தோழர்கள்'. ஆனால் ஸ்டாலின் (இது வேற ஸ்டாலின்ங்க), மார்க்ஸ், லெனினை அடியொட்டி வந்தவர்கள் என்று வாய்ச்சவடாலைப் பாருங்கள். இவர்கள் ஆட்டம் போடும் மேற்கு வங்கத்தில்தானே நந்திகிராம் பல்லிளித்தது?. மக்களைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? சொல்ல முடியாது 'டாடா' சிவப்பு ஜட்டி அணிந்திருக்கலாம்.

இந்தியாவில் கம்யூனிஸம் பேசுவதற்கும், கம்யூனிஸ்டாக செயல்படுவதற்கு நிறையத் தேவை இருக்கிறது. பேச்சோடு நிறுத்திக் கொண்டு நான் கம்யூனிஸ்ட் என்று சொல்பவர்கள்தான் இங்கு அதிகம். உங்களின் பேச்சுக்கும், செயல்பாட்டிற்குமான இடைவெளி எத்தனை பெரியது என்று யோசித்ததுண்டா தோழர்களே?சமீப காலங்களில் தங்களின் தொடர் போராட்டங்களினால் பாட்டாளி வர்க்கம் அடைந்த பலன்களின் பட்டியல் என்று ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?

அந்தக் கருமாந்தரங்களை எல்லாம் விடுங்கள்.

சீனாக்காரன் அடித்துத் துரத்திய திபெத்திய மக்கள், நீங்கள் நந்திகிராமில் செய்தது போன்று அரிவாளோடு திரிகிறார்களா? அமைதியான தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்கு கூட அனுமதியாத நீங்கள், உங்களை நீங்கள் நசுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் 'ஸ்டிரைக்' கூடாது என தடை விதித்தப் போது, போராட்டம் மக்களின் அடிப்படை உரிமை என்று கூச்சலிட்டீர்களே. இப்பொழுது நீங்கள் முடக்கும் போது என்ன ஆனது அடிப்படை உரிமை. எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள் "ஆள்காரன் குசு உட்டா அடிடா புடிடா...பண்ணாடி குசு உட்டா மணக்குது,மணக்குது". நீங்கள் எப்பொழுதுமே பண்ணாடிதானே. ஆள்காரனுக்கு பரிந்து பேசுவதாக நடிக்கும் பண்ணாடி.

கோபிச் செட்டிபாளையத்தில் 97 வயதில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சி.சுப்பிரமணியம் என்ற பெரியவர் போன்ற வெகுசிலர் இன்னும் கம்யூனிஸ்டாக வாழும் காலத்தில்தான் போலிகள் பெருகியிருக்கிறார்கள். போலிகளின் கொடுமை என்னவென்றால் பாதிப்பேயில்லாதது போன்று பெரும்பாதிப்பை உண்டாக்கும். சாராயத்தில் பேட்டரித் தூளை கலப்பது போன்று.

ஒண்ணு சொல்லிக்கவா 'தோழர்ஸ்'? ஓவரா நடிக்காதீங்க...நம்பாம இருக்கிற நம்ம மக்கள் ரொம்ப நாளைக்கு அமைதியாவும் இருக்க மாட்டாங்க.

1 எதிர் சப்தங்கள்:

enRenRum-anbudan.BALA said...

மணி,

தெளிவா சொல்லி இருக்கீங்க, உங்கள் கருத்துகளை ! "நிஜ" கம்யூனிஸ்டுகள் யாராவது வந்து பதில் ஏதாவது சொல்றாங்களான்னு பார்க்கணும் ;-)

திபெத்தில் சீனா செய்வது உச்சக்கட்ட அராஜகம், நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், வாசிக்கவும்.

எ.அ.பாலா