Apr 6, 2005

நினைவு-ஒரு குட்டிக்கவிதை

இன்று-
குளிக்கும்போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு
கல் தடுக்கிய நொடியும்,
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது எளிதெனக்கு.

வா.மணிகண்டன்.

2 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

அழகாய் இருக்கிறது அதனால் பயமாய் இருக்கிறது.
காதலை விட்டு வெளியே வாருங்கள் நண்பரே ஏனெனில் அது மூழ்கடித்துவிடும்

Vaa.Manikandan said...

என்னங்க கணேஷ்,
காதல் அவ்வளவு பொல்லாததா?