கஜா புயல் நிவாரணத்துக்கென ₹ 23,81,252.18 (இருபத்து மூன்று லட்சத்து எண்பத்தோராயிரத்து இருநூற்று ஐம்பத்து இரண்டு ரூபாய்) நன்கொடையாக நிசப்தம் அறக்கட்டளைக்கு வந்திருந்தது. சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் செயல்பாடுகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது. சிடிசி குழுவினர் இப்பொழுது வரைக்கும் தொடர்ச்சியாக டெல்டாவின் மறு நிர்மாணப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் வரைக்கும் ₹ 23,51,939.00 (இருபத்து மூன்று லட்சத்து ஐம்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது ரூபாய்) வழங்கப்பட்டுவிட்டது.
எப்பொழுதும் போல கணக்கு விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரது பார்வைக்காகவும் இந்தப் பதிவு-
எப்பொழுதும் போல கணக்கு விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரது பார்வைக்காகவும் இந்தப் பதிவு-
வரிசை எண் 460 வரைக்குமான விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.
கஜா நிவாரணத்துக்கென வந்த மொத்த நன்கொடை: ₹ 23,81,252.18 (From 11th Nov to 30th Nov)
மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் தொகைகள், நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகைகள். தென்னங் கீற்றுகள் வாங்குவதற்கும், தார்பாலின், கயிறுகள் வாங்குவதற்கும், இன்னபிற பொருட்கள் வாங்குவதற்கும் நேரடியாக கணக்குக்கு மாற்றப்பட்டது.
இதுவரையிலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் வழியாக வழங்கப்பட்ட தொகை: ₹ 23,51,939.00
1) மூன்று காசோலைகள் தவிர பிற அனைத்துமே ஆன்லைன் மூலமாக அவரவர் கணக்குக்கு மாற்றப்பட்டது.
2) முப்பதாயிரம் ரூபாய் தவிர அனைத்துத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது.
3) அனைத்து ரசீதுகளையும் பெற்றுக் கொண்ட பிறகு இன்னொரு பதிவு- ரசீது விவரங்கள் மற்றும் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு என்ன காரியங்கள் செய்யப்பட்டன என்ற முழுமையான விவரங்களுடன் ஒரு பதிவை எழுதுகிறேன்.
பெரிய தொகை இது. நேரமிருப்பவர்கள் மொத்தக் கணக்கையும் ஒரு முறை சரி பார்க்கவும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கணக்கை சரி பார்ப்பது நல்லதுதான்.
ஏதேனும் சந்தேகமிருப்பின் தெரியப்படுத்தவும். நன்றி.
1 எதிர் சப்தங்கள்:
ஜெய் நிசப்தம்
Post a Comment