Nov 23, 2018

டெல்டா - II

கடந்த மூன்று நாட்களில் கஜா புயல் நிவாரணத்துக்கென 272 பேர் நிசப்தம்/சென்னை ட்ரெக்கிங் க்ளப் அணியிடம் பணம் அளித்துள்ளார்கள். பத்து லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது. (பத்து லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து நூற்று முப்பத்தாறு ரூபாய்). சனிக்கிழமை (24.11.2018) மாலை வரையிலும் வரக் கூடிய நிதியானது கஜா வெள்ள நிவாரணத்துக்கென பயன்படுத்தப்படும். அதன் பிறகு நிசப்தம் வங்கிக் கணக்குக்கு வரக்கூடிய தொகை வழக்கம் போல நிசப்தம் அறக்கட்டளையின் கல்வி/மருத்துவ உதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். 

சென்னை ட்ரெக்கிங் குழுவினர் களத்தில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பரவலாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. ஓர் அணி சென்னையில் இருந்து ஒருங்கிணைக்கிறது. பொருட்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, தன்னார்வலர்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, பொருட்கள் எங்கே செல்ல வேண்டும், தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் என சகலத்தையும் இந்த அணி ஒருங்கிணைக்க, களத்தில் ஏகப்பட்ட ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். பொருட்கள் விநியோகம், மரங்களை அப்புறப்படுத்துதல், மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி, வீடு அமைத்தல் என ஆங்காங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து மறு நிர்மாணப் பணிகளைத் தொடங்கவிருக்கிறார்கள். நன்கொடையில் பெரும்பாலான தொகை அந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படும். 

குழுவினர் பணியாற்றும் கிராமங்கள், எந்தத் தேதியில் எந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன போன்ற விவரங்கள், நிழற்படங்கள், பொருட்களைச் சேகரிக்கும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைப்பில் உள்ள தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய பதிவு: டெல்டா- நன்கொடை விவரம்

தற்போதைய நிதி விவரம்:

Opening Balance : Rs. 15,76,639.18
Donations : Rs.10,33,136.00
Material Purchase: Rs. 69180.00
Remaining Amount: Rs. 9,63,956.00 (As on 23.11.2019 4:30 PM)

vaamanikandan@gmail.com








1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Hi,
1) In "chennaitrekkers" page, it is mentioned till 29-Nov, donations will be received for Gaja relief through "Nisaptham trust". But you have mentioned only till 24-Nov.
Kindly clarify.
2) small correction (23-11-2019 to 2018)

Regards,
Rajaram.