Aug 17, 2018

தோள் கொடுப்போம்.

கேரளாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஒரு தகவல்.

பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம்தான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் சல்லிசாகக் கிடைக்கும். உதாரணமாக ஈரோட்டில் லுங்கி, கரூரில் போர்வை என்பது போல. அதனால் அந்தந்த ஊர்க்காரர்கள் ஆங்காங்கே பேரம் பேசி வாங்கி கொடுத்தால் அவற்றை சேகரித்துக் கொண்டு போய் கேரளாவில்  கொடுத்துவிடலாம்.

பணமாகக் கொடுப்பதை விடவும் நாங்களே பொருள் வாங்கிக்  கொடுத்தால் திருப்தியாக இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். அடுத்தவர்களுக்கு உதவுகிற  காரியத்தில் ஒவ்வொருவரின் மனத்திருப்தியும் முக்கியம். 

அவரவருக்கு எது இயலுமோ அதைச் செய்வோம். கடந்த சில நாட்களாக கேரளாவின் பாதிப்புகள் குறித்து பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் அவசியம். இத்தகைய உரையாடலும் ஆதரவான தோள் சேர்ப்பும்தான் முக்கியம். அந்த விதத்தில்  சந்தோசம். இன்னமும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு கை நீட்டினால் கேரள சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.

நம்முடைய பக்கத்துக்கு வீடு அவர்கள்தான்.தமிழர்களின் குணத்தை அவர்களுக்கு காட்டுகிற தருணம் இது. தோள் கொடுப்போம்.

பொருட்களாக வாங்கி கொடுப்பது சாத்தியமில்லை என்கிறவர்கள் 'பணம் கொடுப்பதுதான் சாத்தியம்' என்று நினைத்தால் அதையும் நாங்கள் மறுக்கவில்லை. எங்கெங்கே  எந்தப் பொருளை வாங்குவது என யோசித்துக்  கொண்டிருக்கிறோம். அடுத்த வாரத்தில் அந்தப் பணியைத் தொடங்க வேண்டும். சில நண்பர்கள் பணம்  அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியலில் இருக்கும் பொருட்களில் எதையாவது 'எனக்குத் தெரிந்த இடத்தில் வாங்கி விடலாம். அதனால் வாங்கித் தருகிறோம்' என்று முன்வந்தால் மிக்க  மகிழ்ச்சி. பணம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். அத்தகையவர்கள் திரு.ஜெயராஜ்  அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

https://mahalukshmiv.wordpress.com/2015/12/16/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d/
(குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???)