Sep 24, 2014

போண்டாமணி வித் அணு

போண்டாமணி என்ற பெயரில் ஒரு நண்பர் அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவார். அணு உலைகள் பற்றி அவர் எழுதியிருந்த சுவாரசியமான மின்னஞ்சல்.

                                                                        ***
நம்ம government ஈசியா கிடைக்குதேன்னு அணு உலையை வாங்குது. Maintenance குறைவு. ஒரு 100 பேரைப் போட்டு வேலை வாங்கிட்டா 1000 மெகா வாட் தயாரிச்சு தள்ளிடலாம்.

லாபங்கள் என்ன ?
  1. சின்ன இடத்திலேயே பெரிய லெவல்ல மின்சாரம் - பிளஸ் 
  2. நம்ம கிட்ட அணு கிடைக்கிறது ; நோ பிச்சை - பிளஸ் 
  3. அணு ஆயுதம் தயாரிக்கலாம் ; பாகிஸ்தான் கிட்டேந்து பாதுகாப்பு  - பிளஸ் 
  4. உலக அரங்கில் ஒரு status கிடைக்கும் . நானும் இவ்ளோ மின்சாரம் தயாரிச்சேன் பாத்தியா - பிளஸ் 
அந்த ஏழுமலையான் புண்ணியத்துல எல்லாம்  நல்ல படியா போய் கிட்டு இருந்தா பிரச்சனை இல்லை. ஒரு tube-ஓ, motor-ஓ, generator-ஓ, meter-ஓ, செந்தில் வடக்குபட்டி ராமசாமிக்கு சொன்ன மாதிரி "ஊ ஊ" ன்னு சொல்லிட்டா "கோவிந்தா கோவிந்தா" தான்.

பிரச்சனைகள் என்ன என்ன ?
  • ஒருவேளை நம்ம கூடங்குளத்துலேயே அணு ஆபத்து அபாயம் இருக்குன்னு வெச்சுக்குவோம். மொதல் பிரச்சனை நம்ம government. என்னடா இத்தனை நாளா ‘ஒன்னும் பிரச்சனை வராது. ஒன்னும் பிரச்சனை வராது’ ன்னு சொல்லிக்கிட்டு இருந்தோமே, இப்புடி ஆயிடிச்சேன்னு , thief க்கு scorpion bite கிடைச்ச மாதிரி தேமேன்னு  உம்முன்னு இருப்பாங்க.
  • ரெண்டு மூணு நாள்ல அணுவீச்சு  நம்ம மக்கள் உடம்புல நல்லா உடுருவி உக்காந்துக்கும். அப்புறம் காலம் பூரா கஷ்டம் தான். அவங்களுக்கு தானே? நமக்கு இல்லையே.
  • அணு பாதிப்பு உள்ள இடத்தில் (reactor கிட்ட) மனிதனால் அதிக நேரம் வேலை செய்ய முடியாது. ஆனா செஞ்சா தான் மேற்கொண்டு ஏதும் பதிப்பு இல்லாமல் தடுக்கலாம்; ஒன்னு ரெண்டு உயிர் இழப்பு தானே பரவாயில்லை. போய்ட்டு போகுது.
  •  ஒருவேளை பிரச்சனை உள்ள reactor வெடிச்சிட்டா? சிம்பிள் வேலை. சுத்தி இருக்குற 18 பட்டி ஜனங்களையும் வண்டி ஏத்தி சொந்த நாட்டுலேயே வேற இடத்துக்கு அகதிகளா அனுப்பி வெச்சுடலாம். இனிமே அவங்க சொந்த ஊருக்கு வரக்கூடாது; அதெல்லாம் அரசாங்கத்தோட கட்டுபாட்டுக்கு வந்துட்ட இடம் ஆகிடும்.
  • மக்கள்: நாங்க எப்ப எங்க ஊருக்கு போகலாம் ? அரசாங்கம் : கொஞ்சம் பொறுத்து கிட்டேங்கன்னா ஒரு 1000 இல்லேன்னா 2000 வருசத்துல கண்டிப்பா போகலாம்.
  • மக்கள்: நஷ்டஈடு எதாவது ?  அரசாங்கம் : அணு உலையை சரி பண்ணவே ரொம்ப காசு தேவைப்படுது. இதுல இவங்க வேற போம்மா இங்கேந்து. போபால் விஷ வாயுல அடி பட்டவங்களுக்கே 30 வருசமாகியும் இன்னும் நஷ்டஈடு கொடுத்து முடியல. நேத்து வந்த உங்களுக்கு என்ன அவசரம். போய் queue ல நில்லுமா.
  • மக்கள்: சரிங்க நாங்க தான் கஷ்ட படுறோம் புள்ளை குட்டிகளாவது நல்ல படியா இருக்குமா ?   Doctors : உறுதியா சொல்ல முடியாதும்மா. அணு கதிரால உங்க genes மாறுபாடு ஆகி ஊனமுற்ற குழந்தைகள் கூட பிறக்கலாம். ஆண்டவன் மேல நம்பிக்கை வையுங்க.
  • வெடிச்ச அணு உலை யை என்ன பண்ணுறது? மூடி போட்டு மூடணும். எவ்ளோ செலவானாலும். அங்க தான் ஆள் யாரும் போக முடியாதே? போக முடியாது தான் ஆனாலும் மூடணும். இல்லேன்னா என்ன ஆகும் .? அணு வீச்சு மேகத்துல போய் உக்காந்துக்கும். அப்புறம் மழையா வந்து மொத்த தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ரொம்ப முக்கியமா ஸ்ரீலங்கா .. பொழியும். எல்லா நீர்நிலையும் அணு ஆபத்து உள்ளதாக மாறும். அணு வீச்சு இல்லாத பாட்டில் வாட்டர் 10,000 ரூபாய் க்கு கூட விற்பார்கள் நம்ம ஆளுங்களை பத்திதான் தெரியுமே.
  • திரும்பவும், சாக துணிஞ்ச தமிழ் ஹீரோஸ் மாதிரியான ஆளுங்களை வேலைக்கு வெச்சு மூடி போட்டுட்டோம்ன்னு வெச்சுகங்க பிரச்சனை தீர்ந்துதா ன்னா ? இல்லை. அப்ப போய்ட்டு, ஒரு 50தோ 100 ஓ வருசத்துக்கு அப்புறம் வந்து அதவிட பெருசா மூடி போடணும். அப்புடி மூடி மேல மூடி போட்டு கிட்டே இருக்கோம் ஒரு 2000 வருசத்துக்கு.. 
  • இதுக்கு ஷங்கர் படத்தை விட budget பெருசா இருக்கும் போலையே.. ஆமா .. இவுங்களுக்கு சல்லிசா கரண்ட் வேணுமாம் .. அதனால வர பிரச்சனைய ஸ்டாப் பண்ண காசு இருக்காதாம்.. ஓகே ஓகே UNO கிட்டேந்து பிச்சை கேளுங்கயா..
  • வெடிச்சாதானே இவ்வளோ பிரச்சனையும்? வெடிக்கவே இல்லேன்னா ? அங்கயும் ஒரு ட்விஸ்ட் வெச்சு இருக்கோம். அணுக் கழிவு அதான் உபயோகிச்சு முடிச்ச அணு கூச்சி அத பத்திரப்படுத்தனும். concrete குப்பி ரெடி பண்ணி, உள்ள போட்டு மூடனும். அது எஸ்கேப் ஆனாலும் பிரச்சனை தான். அதையும் 1000 வருசத்துக்கு பத்திரமா வைக்கணும்.
  • அணுவை சாந்த படுத்த உபயோக படுத்தப்பட்ட தண்ணி (Heavy Water), அதுவும் பிரச்சனை தான். அதுவும் சுத்திகரிக்காமல் நிர்நிலைகளில் கலந்தா ஆபத்து தான்.
அணு உலையை கட்டி பராமரிப்பது என்பது நூலின் மேல் நடக்கும் விஷயம். அணுவின் அரக்க பசிக்கு மனித உயிர்களை தீனியாக போட்டு விட கூடாது. கரண்ட் இல்லாமல் கஷ்டபட்டாலும் பரவாயில்லை, அணு உலை வேண்டாம். 

புகுஷிமாக்கு பிறகு ஜப்பான் அணு மின்சாரம் தயாரிக்கவில்லை; ஜெர்மனி எல்லா(9) அணு உலைகளையும் மூட போகிறார்கள்; சுவிட்சர்லாந்து எல்லா (5) அணு உலைகளையும் மூடப் போகிறார்கள். நாம் தான் புதிதாக திறக்கின்றோம்.

நீ என்ன கிழிச்சே ? என்று கேட்குறீங்களா .. http://pmindia.gov.in/en/login/ போய் நரேந்திர மோடி ஐயாவுக்கு ஒரு லெட்டர் போட்டேன். இணையத்தில் உழன்று உளறும் என்னை போன்ற தமிழன் வேறு எந்த மலையை புரட்டி விட முடியும்.