Jul 29, 2010

வெறும் சூசகம்


நான் எதையும் விரைவில் சூசகமாக உணர்ந்து கொள்பவன் என்று நண்பர்கள் கூறுவார்கள். அதற்கு உதாரணமாகச சென்ற வியாழக்கிழமை நடந்த- நான் சம்பந்தப்பட்ட-ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறார்கள்.

அன்று காலை நான் திகில் நிறைந்த மர்ம நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நல்ல பகல் நேரம்தான். இருந்தாலும் ஏதோ ஒரு சூசக உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். இரத்தவெறி பிடித்த ஒரு கொலைகாரன் பெரிய கடாரியுடன் அடுக்களைக்குள் இருப்பதாகவும், நான் அங்கே நுழைந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கடாரியால் என் முதுகில் குத்துவான் என்றும் அந்த உணர்வு தெரிவித்தது. அடுக்களை வாசலுக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தேன். என் கண்ணைத் தப்பி யாரும் செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இவ்வளவு இருந்தும் கொலையாளி அடுக்களைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதாகவே என் மனதுக்கு தோன்றிக் கொண்டிருந்தது.

அந்த உணர்வுக்கு நான் முற்றிலும் ஆட்பட்டிருந்தேன். அடுக்களைக்குள் செல்லப் பயமாயிருந்தது. சாப்பாட்டு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ உள்ளே செல்லாமல் முடியாது. இந்தக் கவலையில் ஆழ்ந்திருந்தபோது வாசலில் மணி அடித்தது.

"வாருங்கள்" கத்தினேன். "கதவு திறந்துதான் இருக்கிறது".

வீட்டுக்காரர் உள்ளே வந்தார். கையில் இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன.
"தூங்கிவிட்டேன்" என்றேன். "அடுக்களைக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வருவீர்களா?"

"தாராளமாக" என்றார் வீட்டுக்காரர். அடுக்களைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். "ஆ" என்ற அலறலும், பாத்திரங்களை உருட்டித் தள்ளியபடி ஓர் உடல் விழும் ஓசையும் கேட்டன. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து அடுக்களைக்கு ஓடினேன். முதுகில் இறங்கிய ஒரு பெரிய கடாரியுடன் பாதி உடல் மேஜை மேல் கிடக்க, வீட்டுக் காரர் இறந்து கிடந்தார். அடுக்களையில் கொலைகாரன் யாருமில்லை எனத் தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அமைதியடைந்தேன்.

பாருங்கள். எல்லாம் சூசக உணர்வுதான்.
====
ஃபெர்ணாண்டோ ஸோரண்டினோ(Fernando Sorrentino) எழுதிய ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற தொகுப்பில் இருந்து.(தமிழில்: எம்.எஸ், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

http://thaanthonry.blogspot.com/p/archive_29.html

see archive page in my blogger.(archive show all post titles by dates in a single static page).create it for your blog to find all post titles in a single static page. follow steps here

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

http://thaanthonry.blogspot.com/p/site-map.html

see my site map. (site map shows all post titles by categories in a single static page)

for site map follow steps for creating archive page. But regarding code there is a change. place the code in this link

http://www.abu-farhan.com/2010/05/table-of-content-and-accordion-for-blogger/

create both archive(all post titles by dates) and site map(all post titles by categories) and make readers to have a user friendly blog.

இனியாள் said...

நல்லா இருக்கு.