நான் மிக ரசித்த ஜெர்மானிய படங்களுல் மிக முக்கியமானதாக கருதுவது, சோபியா (Shopiya Magdelana Scholl) என்ற பெண், ஹிட்லர் காலத்தில் அரசுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதற்காக, தன் அண்ணன், அவனது நண்பண் ஆகியோரோடு சேர்த்து சிரச்சேதம் செய்யப்பட்ட கதையான 'தி பைனல் டேஸ்'.
அதன் பிறகு வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மானிய இயக்குனரின், 70களின் ஆரம்பத்தில் வெளியான Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979)மற்றும் 80களின் தொடக்கத்தில் வெளியான Fitzcarraldo (1982) ஆகிய படங்களை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.
இவற்றில் ஃபிட்ஸ்கரால்டோ உலக அளவில் பேசப்பட்ட படம் என்ற போதிலும் எனக்கு வொய்செக் மிகப் பிடித்திருந்த்து. மற்ற இரண்டு படங்களில் இயற்கையை பிரம்மாண்டாக காட்டியிருந்த வெர்னர், வொய்செக்கில் மனித மனத்தினை கண்ணாடியின் துல்லியத்தோடு வர்ணித்திருந்தார்.
_________
வொய்செக், ராணுவத்தில் சிப்பாயாக இருக்கிறான். தன் மனைவிக்காக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு அலையும் வொய்சக், தன் கேப்டனுக்கு சவரம் செய்வது உட்பட அனைத்து விதமான பணிவிடைகளையும் மேற்கொள்கிறான். உள்ளூர் மருத்துவன் ஒருவனின் ஆராய்ச்சிக்காக தன்னை உட்படுத்திக்கொள்கிறான். பட்டாணி மட்டுமே உண்டு வாழச்சொல்லும் மருத்துவனின் கட்டளையாளும், மிகத் தீவிர சிந்தனையாளும் அவனைச் சுற்றிலும் ஓசைகள் கேட்டுக் கொண்டேயிருப்பதாக உணரத்துவங்குகிறான். நகரத்தின் மையத்திலிருந்து எழும் புகை அவனைத் தொடர்ந்து துரத்தி வதைப்பதாக பயப்படுகிறான். அவனது செயல்பாடுகள் முற்றிலுமாக நிலை குலையத் துவங்குகின்றன. இதே சமயத்தில் அவனது மனைவி, ஆண்டர்ஸ் என்னும் 'டிரம்' இசைக்கருவி வாசிப்பவனோடு காதல் கொள்கிறாள்.
வொய்செக்கிடம், அவனது கேப்டனும், மருத்துவனும் "உன் சூப்பில் யாரேனுமுடைய தாடி முடி கிடந்த்ததா? இல்லையெனிலும் ஒரு ஜோடி இதழ்களில் கிடைக்கக் கூடும்" என்கிறார்கள். அதிர்ச்சியடையும் வொய்செக், தன் மனைவியிடம் விசாரிக்கிறான்.
தனக்குத்தானே பிதற்றித்திரியும் அவனிடம், ஆன்ட்ர்ஸ் தான் ஒரு ஆண் என்று அவளின் தொடைகள் அழகாக இருப்பதாகவும் பேச, கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறான். ஆண்டர்ஸோடு, அவன மனைவி ஒரு விடுதியில் நடனமாடிக்கொண்டிருப்பதை கவனித்துவிடும் வொய்செக்கின் காதுகளில் "நிறுத்தாதே" என்ற அவளது சொற்கள் விழுகின்றன. தொடர்ச்சியாக அதே சொற்களைத் திரும்ப திரும்ப உச்சரிக்கிறான்.
தன் மனைவியை தனியாக அழைத்துச் சென்று நதிக்கரையில் கொலை செய்துவிட்டு நடன விடுதிக்குச் செல்கிறான். அங்கு "கேட்டி" என்றவளோடு வெறித்தனமாக நடனமாடுகிறான். அவள், அவன்து கரங்களில் இருக்கும் இரத்தம் குறித்து விசாரிக்கிறாள். மற்றவர்களும் அவளோடு சேர்ந்து கொள்ள, மூர்க்கமாக வெளியேறி தான் வீசிய கத்தியை நதிக்கரையில் தேடுகிறான். அதனை எடுத்து நதிக்குள் வீசிய பிறகு, நம்பிக்கையில்லாமல் மீண்டும் எடுதது வீசுகிறான். நதியின் உட்புறமாக நகர்ந்து காணாமல் போகிறான்.
மறுநாள் காலையில், நகரத்தின் காவலர்கள் "மிக அழகான கொலை. நம் வாழ்நாளில் கண்டிராத கொலை" என்று வர்ணிக்கிறார்கள்.
_________
இந்தப்படம் பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்டது.
__________
இந்தப்படத்தின் மைய இழை ஒரு ஆண், பெண்ணின் மீது வைத்திருக்கும் அளவுக்கு மீறிய அன்பின் வெளிப்பாடுதான். அன்பினை வெளிப்படுத்தத் தெரியாத பரிதாபத்திற்குரியதான கதாபாத்திரமாக Klaus Kinski அற்புதமாக நடித்திருப்பார். தன் இயலாமையை எந்த இடத்திலும் மறுக்காத கதாபாத்திரம். வொய்செக்கின் மனைவியாக Eva Mattes. தான் செய்வது தவறென்று உணர்கிறாள். அடக்கவியலாத காமம் ஒரு பேயைப் போல துரத்துகிறது அவளை.
பெண்ணின் மனத்தளத்தில் இருக்கும் வெவேறு நட்பு அடுக்குகளும் தனக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற ஆசை அந்த தளங்களிள் எந்தத் தளத்திலும் தான் இருந்தாலும் ஒரு ஆணுக்கு இருக்கிறது. அது குறித்தான தகவல்கள் தெரியவராத போது, அவற்றை மர்மங்களாக உணரத்துவங்குகிறான். தான் மற்றவர்களோடு போட்டியிட இயலாதவனோ என்ற தாழ்வுணர்ச்சி வரும்போது, எப்படியாவது வென்றுவிட முனைப்பு காட்டும் மனம் எந்தக் காரியத்தையும் செய்துவிடத் துணிகிறது.
விலகி இருந்து மகிழ்ச்சியடையும் சந்தோஷத்தை தொட்டுப்பார்க்க முயல்வதில்லை.
_______________
அதன் பிறகு வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மானிய இயக்குனரின், 70களின் ஆரம்பத்தில் வெளியான Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979)மற்றும் 80களின் தொடக்கத்தில் வெளியான Fitzcarraldo (1982) ஆகிய படங்களை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.
இவற்றில் ஃபிட்ஸ்கரால்டோ உலக அளவில் பேசப்பட்ட படம் என்ற போதிலும் எனக்கு வொய்செக் மிகப் பிடித்திருந்த்து. மற்ற இரண்டு படங்களில் இயற்கையை பிரம்மாண்டாக காட்டியிருந்த வெர்னர், வொய்செக்கில் மனித மனத்தினை கண்ணாடியின் துல்லியத்தோடு வர்ணித்திருந்தார்.
_________
வொய்செக், ராணுவத்தில் சிப்பாயாக இருக்கிறான். தன் மனைவிக்காக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு அலையும் வொய்சக், தன் கேப்டனுக்கு சவரம் செய்வது உட்பட அனைத்து விதமான பணிவிடைகளையும் மேற்கொள்கிறான். உள்ளூர் மருத்துவன் ஒருவனின் ஆராய்ச்சிக்காக தன்னை உட்படுத்திக்கொள்கிறான். பட்டாணி மட்டுமே உண்டு வாழச்சொல்லும் மருத்துவனின் கட்டளையாளும், மிகத் தீவிர சிந்தனையாளும் அவனைச் சுற்றிலும் ஓசைகள் கேட்டுக் கொண்டேயிருப்பதாக உணரத்துவங்குகிறான். நகரத்தின் மையத்திலிருந்து எழும் புகை அவனைத் தொடர்ந்து துரத்தி வதைப்பதாக பயப்படுகிறான். அவனது செயல்பாடுகள் முற்றிலுமாக நிலை குலையத் துவங்குகின்றன. இதே சமயத்தில் அவனது மனைவி, ஆண்டர்ஸ் என்னும் 'டிரம்' இசைக்கருவி வாசிப்பவனோடு காதல் கொள்கிறாள்.
வொய்செக்கிடம், அவனது கேப்டனும், மருத்துவனும் "உன் சூப்பில் யாரேனுமுடைய தாடி முடி கிடந்த்ததா? இல்லையெனிலும் ஒரு ஜோடி இதழ்களில் கிடைக்கக் கூடும்" என்கிறார்கள். அதிர்ச்சியடையும் வொய்செக், தன் மனைவியிடம் விசாரிக்கிறான்.
தனக்குத்தானே பிதற்றித்திரியும் அவனிடம், ஆன்ட்ர்ஸ் தான் ஒரு ஆண் என்று அவளின் தொடைகள் அழகாக இருப்பதாகவும் பேச, கோபத்தின் உச்ச நிலைக்குச் செல்கிறான். ஆண்டர்ஸோடு, அவன மனைவி ஒரு விடுதியில் நடனமாடிக்கொண்டிருப்பதை கவனித்துவிடும் வொய்செக்கின் காதுகளில் "நிறுத்தாதே" என்ற அவளது சொற்கள் விழுகின்றன. தொடர்ச்சியாக அதே சொற்களைத் திரும்ப திரும்ப உச்சரிக்கிறான்.
தன் மனைவியை தனியாக அழைத்துச் சென்று நதிக்கரையில் கொலை செய்துவிட்டு நடன விடுதிக்குச் செல்கிறான். அங்கு "கேட்டி" என்றவளோடு வெறித்தனமாக நடனமாடுகிறான். அவள், அவன்து கரங்களில் இருக்கும் இரத்தம் குறித்து விசாரிக்கிறாள். மற்றவர்களும் அவளோடு சேர்ந்து கொள்ள, மூர்க்கமாக வெளியேறி தான் வீசிய கத்தியை நதிக்கரையில் தேடுகிறான். அதனை எடுத்து நதிக்குள் வீசிய பிறகு, நம்பிக்கையில்லாமல் மீண்டும் எடுதது வீசுகிறான். நதியின் உட்புறமாக நகர்ந்து காணாமல் போகிறான்.
மறுநாள் காலையில், நகரத்தின் காவலர்கள் "மிக அழகான கொலை. நம் வாழ்நாளில் கண்டிராத கொலை" என்று வர்ணிக்கிறார்கள்.
_________
இந்தப்படம் பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்டது.
__________
இந்தப்படத்தின் மைய இழை ஒரு ஆண், பெண்ணின் மீது வைத்திருக்கும் அளவுக்கு மீறிய அன்பின் வெளிப்பாடுதான். அன்பினை வெளிப்படுத்தத் தெரியாத பரிதாபத்திற்குரியதான கதாபாத்திரமாக Klaus Kinski அற்புதமாக நடித்திருப்பார். தன் இயலாமையை எந்த இடத்திலும் மறுக்காத கதாபாத்திரம். வொய்செக்கின் மனைவியாக Eva Mattes. தான் செய்வது தவறென்று உணர்கிறாள். அடக்கவியலாத காமம் ஒரு பேயைப் போல துரத்துகிறது அவளை.
பெண்ணின் மனத்தளத்தில் இருக்கும் வெவேறு நட்பு அடுக்குகளும் தனக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற ஆசை அந்த தளங்களிள் எந்தத் தளத்திலும் தான் இருந்தாலும் ஒரு ஆணுக்கு இருக்கிறது. அது குறித்தான தகவல்கள் தெரியவராத போது, அவற்றை மர்மங்களாக உணரத்துவங்குகிறான். தான் மற்றவர்களோடு போட்டியிட இயலாதவனோ என்ற தாழ்வுணர்ச்சி வரும்போது, எப்படியாவது வென்றுவிட முனைப்பு காட்டும் மனம் எந்தக் காரியத்தையும் செய்துவிடத் துணிகிறது.
விலகி இருந்து மகிழ்ச்சியடையும் சந்தோஷத்தை தொட்டுப்பார்க்க முயல்வதில்லை.
_______________
2 எதிர் சப்தங்கள்:
I'm the first :-)
Karthik.S
மணி ரொம்ப டேங்க்ஸ் பா ..தேடுதல் வேட்டையில இருக்க ஆள் தான் இவரும் ..ஏதாவது டவுண்லோடிங்க் ஆப்ஷன் ல கிடைக்குமா இவர் படம் :)
Post a Comment