ஐதராபாத்தின் பெருமைகளைச் சொல்ல ஒரு நாள் போதாது.அதே போல்தான் அதன் கொடுமைகளையும்.'அமர்க்களம் படத்தில் வரும் ""கேட்டேன் பாடல் ஆசைகளைப் போல்தான் எனது ஆசைகளும்.
பாக்கு போடாத ஆணைக் கேட்டேன்
பர்தா போடாத ஃபிகரைக் கேட்டேன்
எச்சில் துப்பாத மனிதன் கேட்டேன்
ட்ராபிக் இல்லாத சாலையைக் கேட்டேன்
ரூல்ஸை ஃபாலோ பண்ணும் டிரைவர் கேட்டேன்
சர்க்கரை இல்லாத சாம்பார் கேட்டேன்
காரம் இல்லாத சாதம் கேட்டேன்
பொடிஞ்சு போகாத இட்லி கேட்டேன்
லு சேர்க்காத வார்த்தை கேட்டேன்
உ இணையாத ஆங்கிலம் கேட்டேன்
கப்ஷா இல்லாத சினிமா கேட்டேன்
குத்தாட்டம் இல்லாத ஊர்வலம் கேட்டேன்
தகரம் அடிக்காத பேண்ட் க்ரூப் கேட்டேன்
சாலைகள் நிரம்பாத மழை நாள் கேட்டேன்
பேச்சிலருக்கு தரும் வீடுகள் கேட்டேன்
குறைந்த செலவில் பஸ் பயணம் கேட்டேன்
பயந்து போகாத போலீஸ் கேட்டேன்
மேகப் செய்யாத பெருசுகள் கேட்டேன்
டையிங் செய்யாத சிறுசுகள் கேட்டேன்
படித்துப் பார்க்க தமிழ் பேப்பர் கேட்டேன்
குளித்துப் பார்க்க வாய்க்கால் கேட்டேன்
நடந்து பார்க்க கடற்கரை கேட்டேன்
அட்லீச்ட் எனக்கொரு ஃபிகரைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்க வில்லை
கிடைத்தவை யாவும் பிடிக்கவில்லை.....
இந்த ஊரே ஊரே வேண்டாம்
வேறு ஊரு ஊரைக்கேடேஏஏஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......
Sep 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 எதிர் சப்தங்கள்:
i really enjoyed.
ம்ம்ம்ம் இதத்தான் சொல்வாங்களோ இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்கிறதுன்னு :-))))
Post a Comment