Apr 19, 2005

புறக்கணிப்பு!

Image hosted by Photobucket.com

நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்

அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின்
ஆழத்திலெழும்கேவல்
என

எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்
புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

நன்றி:திண்ணை.காம்

3 எதிர் சப்தங்கள்:

ilavanji said...

நல்லா இருக்கு மணி!

படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க!

Ganesh Gopalasubramanian said...

இது ஏற்கனவே "ஒரு கவிதை" என்னும் தலைப்பில் வெளி வந்து "பேசப்பட்ட" மாதிரி தெரியுதே

Vaa.Manikandan said...

ஆமாம் கணேஷ்,வேறு கவிதையை போட்டிருக்க வேண்டும்,ஏதோ(யாரோ அல்ல) நினைவில் போட்டுவிட்டேன்.மன்னிக்க.
பொயட் வந்துடீங்களா?