Aug 23, 2009

தகவல்

சென்ற வாரத்தில் பிரவீன் குறித்த கட்டுரையை படித்த சில நண்பர்கள் எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது என்று வினவியிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது.

விருப்பப்படும் தோழர்கள் எனது மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் அனுப்பினால் தேவையான விபரங்களை நன்றிகளுடன் அனுப்பி வைக்கிறேன். (vaamanikandan@gmail.com/ அலைபேசி: 9663303156)

இதுவரைக்கும் ரூ.11,300/ ரூபாய் கிடைத்திருக்கிறது.

இந்த நிதி திரட்டலை ஆகஸ்ட் 31 அன்று முடித்துக் கொள்ளலாம என்று நினைத்திருந்தேன். ஊதியம் வந்த பிறகு உதவுவதாக ஓரிருவர் தெரிவித்ததால் செப்டம்பர் 4 வரை நீட்டித்து, தொகையை செப்டம்பர் 5 அன்று பிரவீனிடம் தந்துவிடலாம் என்றிருக்கிறேன்.

ஏதோ ஒரு நண்பர் பிரவீனின் தந்தையிடம் இதைப் பற்றி தெரிவித்துவிட்டார்.
கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த வேறொருவர் எனது வலைப்பதிவை கவனிக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். நண்பருக்கு ஒரு வேண்டுகோள்: சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அவரது எதிர்பார்ப்பினை அதிகமாக்கிவிட வேண்டாம்.

நன்றி.

1 எதிர் சப்தங்கள்:

Marimuthu Murugan said...

மணி அண்ணன் அவர்களுக்கு ,
முதலில் என்னை மன்னிக்க வேண்டும்.நான் 'பிரவீன்' பற்றிய பதிவையும், நீங்கள் செய்து கொண்டிருக்கும் உதவியையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.அதை என் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த செய்தியை பிரவீனின் தந்தையிடம் சொல்வார்கள் என்று நினைக்கவில்லை.அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.
நான் காலேஜ் பிரிவு கொள்ளங்க்காடு வீதியில் தான் இருக்கிறேன். நீங்கள் "தலைவர் அடித்து விட்டார் மணி, இன்னும் பேசினால் உதை விழும் இனி," என்று பேச்சு போட்டியில் கலக்கிக்கொண்டு இருந்த நாள் முதல் உங்களை எனக்கு தெரியும். உங்கள் பேச்சில் ரசிகனான நான், எழுத்திலும் இப்போது ரசிகனாய் இருக்கிறேன்.நன்றி .

இவன்
மு.மாரிமுத்து